உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி வீட்டில் நகை,பணம் திருட்டு

Published On 2022-09-24 15:08 IST   |   Update On 2022-09-24 15:08:00 IST
  • தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
  • போலீசார் வழக்கு பதிந்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகேயுள்ள ரெட்டிபட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரோஜா (வயது 60).இருவரும் கூலி தொழிலாளிகள். சம்பவத்தன்று சரோஜா வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது யாரோ மர்ம நபர் வீட்டில் புகுந்து ஒன்னேகால் தங்கநகை மற்றும் ரூ.9,000 பணம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

இது குறித்து சரோஜா ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News