உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த முதியவர் சாவு
- வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது நடந்த விபத்து.
- பைக்கில் இருந்து தவறி விழுந்ததால் உயிரிழந்த பரிதாபம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திகானபள்ளி பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது65). இவர் இருசக்கர வாகனத்தில் ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாம்ராஜ்நகர் அருகே வந்த போது அவர் எதிர்பாராதவிதமாக சாலையில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிேலயே முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.