உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே 3 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்

Published On 2022-10-31 09:36 GMT   |   Update On 2022-10-31 09:36 GMT
  • கடந்த 21-ந்தேதி இதேபோல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
  • குழந்தைகளையும் காணவில்லை.பல்வேறு இடங்களில் விசாரித்து அவர்களை பற்றி எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி செல்வி (வயது 26). இவர்களுக்கு சரண் (10), செஷாந்தி (8),அஜய் (4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 21-ந்தேதி இதேபோல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாதையன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார்.

அவர் திரும்பி வந்து பார்த்தபோது செல்வியையும், குழந்தைகளையும் காணவில்லை.பல்வேறு இடங்களில் விசாரித்து அவர்களை பற்றி எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.

இதையடுத்து உத்தரப்பள்ளியில் உள்ள செல்வியின் தாய் வீட்டுக்கு சென்று அங்கும் மாதையன் விசாரித்தார்.

ஆனால் அங்கும் செல்வி செல்லவில்லை. இது குறித்து செல்வியின் தந்தை முனியாண்டி (55) உத்தரப்பள்ளி போலீசில் புகார் செய்தார் .அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான செல்வியையும் அவரது குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News