உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் உறவினர்களிடம் விசாரணை

Published On 2022-11-08 15:43 IST   |   Update On 2022-11-08 15:43:00 IST
  • நிலத்தை அபகரிக்க உறவினர்கள் சிலர் முயற்சித்து வந்ததாக கூறப்படுகிறது.
  • கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டு கிடந்தார்

கிருஷ்ணகிரி 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அடுத்த தேவர்முக்குளம் அருகேயுள்ள ராமேனத்தத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 51).

இவரது கணவர் ராஜேந்திரன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து பழனியம்மாள் தனது தாய் நாகம்மாளுடன் வசித்து வந்தார்.இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது.

பழனியம்மாளுக்கு வாரிசுகள் இல்லாததால் அந்த நிலத்தை அபகரிக்க உறவினர்கள் சிலர் முயற்சித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பழனி யம்மாள் நேற்று கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டு கிடந்தார்.இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவேரிபட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் பழனியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் பழனியம்மாளின் உறவினர்கள் 9 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News