உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் சிக்கினர்

Published On 2022-11-10 14:50 IST   |   Update On 2022-11-10 14:50:00 IST
  • பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கும்பல் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றனர்.
  • அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் போலீசார் ஒண்டுக்குடிக்கை வன பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கும்பல் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் தொட்டகாரபள்ளி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன், வெங்கடேஷ், ரோஷன், முருகன் என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள்,ரூ.400 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News