உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி அருகே பசுமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை
- கீழ்க்காத்தேரி ரேஷன் கடை எதிரில் மாடு இறந்து கிடந்தது.
- 3 பசுமாடுகள் வளர்த்து வந்தனர்.
அரவேனு,
கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னான். இவரது மனைவி செல்லம்மா. இவர்கள் 3 பசுமாடுகள் வளர்த்து வந்தனர்.
வழக்கமாக மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் மாலையில் வீடு திரும்பி விடும். ஆனால் 2 மாடுகள் மட்டுமே வீடு திரும்பி இருந்தது. ஒரு மாட்டை காணவில்லை.
மாட்டை தேடிச் சென்றபோது கீழ்க்காத்தேரி ரேஷன் கடை எதிரில் மாடு இறந்து கிடந்தது.
சிறுத்தைப்புலி தாக்கியதில் மாடு இறந்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.