உள்ளூர் செய்திகள்

கந்திகுப்பம் அருகே கார் மோதி 2 பேர் பரிதாப சாவு

Published On 2022-06-08 15:32 IST   |   Update On 2022-06-08 15:32:00 IST
  • கார் மோதி வடமாநில டிரைவர்கள் 2 பேர் பலியாகி உள்ளனர்.
  • சாலையை கடக்க முயன்ற போது விபத்து நேர்ந்த பரிதாபம்.

கிருஷ்ணகிரி,

மத்திய பிரதேச மாநிலம், இண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவபிரசாத் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் யாதவ் (60). இவர்கள் இருவரும் மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு சரக்கு லாரியை ஓட்டி வந்தனர்.

கடந்த 5-ந் தேதி இரவு கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே ஒரப்பம் பஸ் நிலையம் அருகில் லாரியை நிறுத்திவிட்டு சாலையின் மறுபுறம் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.

அப்போது அவர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி வந்த கார் சிவபிரசாத், ஜெகதீஸ் யாதவ் மீது மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிவபிரசாத் இறந்தார். ஜெகதீஸ் யாதவ் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இந்த விபத்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News