உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்

Published On 2022-06-23 15:54 IST   |   Update On 2022-06-23 15:54:00 IST
  • சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார்.
  • வட்ட வழங்கல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் ரூ.2,21,400- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

ஓசூர்,

ஓசூர் அருகே எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைப்பெற்றது.

இந்த முகாமிற்கு, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கி, 41 பயனாளிகளுக்கு, சமூக பாதுகாப்பு திட்டம், தோட்டக்கலைத்துறை, வட்ட வழங்கல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் ரூ.2,21,400- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் இதில், ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர் தம்பிதுரை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News