உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி

Published On 2022-07-31 09:42 GMT   |   Update On 2022-07-31 09:42 GMT
  • ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.யில் சிறுத்தை உலாவரும் காட்சி பதிவாகி இருந்தது.
  • நேற்றிரவு வீட்டில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள பன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறியுள்ளது. அந்த சிறுத்தை நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி அளவில் ஓசூர் பைரப்பனஅள்ளி கிராமத்திற்குள் புகுந்தது.

பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தை அங்குள்ள ஒரு வீட்டின் காமவுண்டு சுவர் மீது ஏறி குதித்து உள்ளே புகுந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த சிறுத்தை வெளியே வந்தது. பின்னர் வந்த வழியே சிறுத்தை திரும்பி சென்றது. இந்த காட்சி அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது. இதனை பார்த்த அந்த வீட்டின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனால் நேற்றிரவு வீட்டில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News