உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் தொழிலாளி பலி
- மின்சார கம்பியில் ஜெயபிரகாஷ் சாகுல் கை பட்டுவிட்டது.
- மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகன் ஜெயபிரகாஷ் சாகுல் (வயது21).
இவர் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் உள்ள பாஞ்சாலிநகர் பகுதியில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
ஓட்டலில் சுத்தப்படுத்தும் போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பியில் ஜெயபிரகாஷ் சாகுல் கை பட்டுவிட்டது.
இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.