உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய வாலிபர் கைது

Published On 2022-07-05 08:17 GMT   |   Update On 2022-07-05 08:17 GMT
  • குட்கா பொருட்கள் 142 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
  • மேலும் 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு.

ஓசூர், 

ஓசூர் டவுன் போலீசார், தளி ரோட்டில் ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.1 25,000- மதிப்புள்ள குட்கா பொருட்கள் 142 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை, பெங்களூரி லிருந்து திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி பகுதிக்கு காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் ஆதவன் (25) என்பவரை கைது செய்தனர்.

மேலும் தலைமறை வாகிவிட்ட வந்தவாசி பகுதியை சேர்ந்த தாமோதரன், ராஜி, ஹரி, சஞ்சய், சூரியா, சரத் ஆகிய 6 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News