உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2022-07-04 10:05 GMT   |   Update On 2022-07-04 10:05 GMT
  • அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • உடன் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள திம்மனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா(45).கூலி தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் புட்டப்பா (41), நரசிம்மப்பா (44) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தேன்கனிக்கோட்டை-தளி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே வெங்கட்ராமப்பா துடிதுடித்து உயிரிழந்தார்.

புட்டப்பாவும், நரசிம்மப்பாவும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News