உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
- அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- உடன் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள திம்மனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா(45).கூலி தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் புட்டப்பா (41), நரசிம்மப்பா (44) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தேன்கனிக்கோட்டை-தளி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே வெங்கட்ராமப்பா துடிதுடித்து உயிரிழந்தார்.
புட்டப்பாவும், நரசிம்மப்பாவும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.