உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்ட காட்சி.

தாரமங்கலம் அருகேஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்பு

Published On 2023-04-22 07:57 GMT   |   Update On 2023-04-22 07:57 GMT
  • அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது.
  • சுமார் 20 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் ராஜா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தார்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகி லுள்ள செலவடை ராஜா கோவில் அருகே அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது.

இதில் சுமார் 20 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் ராஜா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தார். இது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் நாகலட்சுமி இடத்தை ஆய்வு செய்தார்.

அப்போது அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதியா னது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

Tags:    

Similar News