உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் அருகேசாக்கடையில் தவறி விழுந்த வங்கி காவலாளி பலி

Published On 2023-04-22 09:18 GMT   |   Update On 2023-04-22 09:18 GMT
  • கடந்த 15 வருடமாக தார மங்கலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளி யாக பணி புரிந்து வந்தார்.
  • திறந்த வெளி சாக்கடையை கடக்க முயன்ற போது அவர் தவறி விழுந்தார்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள நங்கவள்ளி, வீரக்கல் கீழ் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (55). இவர் கடந்த 15 வருடமாக தார மங்கலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளி யாக பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி வங்கி முன்பு நகராட்சி சார்பில் தோண்டப் பட்ட திறந்த வெளி சாக்கடையை கடக்க முயன்ற போது அவர் தவறி விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் மேட்டூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News