உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே தனியார் நிதி நிறுவனம் நெருக்கடியால் பெண் தற்கொலை

Published On 2022-08-06 09:09 GMT   |   Update On 2022-08-06 09:09 GMT
  • கடலூர் அருகே தனியார் நிதி நிறுவனம் நெருக்கடியால் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
  • வீடு கட்டுவதற்கு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 6 லட்சம் கடன் வாங்கி இருந்தனர்.

கடலூர்:

கடலூர் அருகே அணுகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி ஜெயந்தி (வயது 45).இவர்கள் வீடு கட்டுவதற்கு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 6 லட்சம் கடன் வாங்கி இருந்தனர். இதற்காக அவர்கள் மாத தவணை கட்டி வந்தனர். கடந்த மாதம் தவணை கட்டவில்லை. இதனை அறிந்த நிதிநிறுவனத்தினர் நேராக செல்வராஜ் வீட்டுக்கு விரைந்தனர். அப்போது செல்வராஜ், அவரது மனைவி யந்தி வீட்டில் இல்லை. அங்கு ஜெயந்தியின் மகள் மட்டும் இருந்தார். 

உடனே நிதிநிறுவனத்தினர் ஜெயந்தி மகளிடம் தவணை கட்டுவதற்கு குறித்து தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர் மாலைநேரம் ஜெயந்தி தனது வீட்டுக்கு வந்தார். அப்போது நடந்த விவரம் குறித்து மகள் கூறினார். இதனால் ஜெயந்தி மனமுடைந்தார். நிதி நிறுவனம் பணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதால் தற்கொலை செய்வது என தீர்மானித்தார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜெயந்தி தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்கான கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

Tags:    

Similar News