உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே: வி.சி.க. கொடி கம்பம் கல்வெட்டு உடைப்பு

Published On 2022-07-03 10:29 GMT   |   Update On 2022-07-03 10:29 GMT
  • விடுதலை சிறுத்தை கொடி கம்பம் கல்வெட்டை உடைத்தனர்
  • முருகானந்தம் என்பவர் குடிபோதையில் கல்வெட்டில் என் பெயர் இல்லை என கூறி கல்வெட்டை உடைத்தாக கூறப்படுகிறது.

கடலூர்:

கடலூர் அடுத்த பத்திரக்கோட்டை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 35). இவர் சம்பவதன்று குடிபோதையில் அப்பகுதியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் கல்வெட்டில் என் பெயர் இல்லை என கூறி கல்வெட்டை உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுப்பிரமணியன் கேட்டபோது திட்டியதாக தெரிகிறது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் முருகானந்தம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News