உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறில் 7 பேர் மீது வழக்கு

Published On 2022-07-04 15:37 IST   |   Update On 2022-07-04 15:37:00 IST
  • நேற்று இருத்தரப்பினர்களும் மோதி கொண்டனர்.
  • 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள மகாதேவ கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வைரம். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்துள்ளது. இதனால் நேற்று இருத்தரப்பினர்களும் மோதி கொண்டனர்.

இது குறித்து இரு பிரிவினர்கள் ேபாலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சாவித்திரி, வளர்மதி, விஜயா, ராஜம்மாள், வைரம், ராஜாமணி, கவிதா ஆகிய 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News