உள்ளூர் செய்திகள்

பர்கூர் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2022-06-23 15:57 IST   |   Update On 2022-06-23 15:57:00 IST
  • பைக்கில் சென்ற போது மர்ம நபர் கைவரிசை காட்டியுள்ளார்
  • 6 பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள பாசிநாயனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி விஜயா. இவர் தனது தங்கை செல்வியுடன் கடந்த 22-ந்தேதி அன்று இருசக்கர வாகனத்தில் பர்கூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் விஜயாவின் கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்று விட்டார்.

இது குறித்து அவர் பர்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News