உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி-அம்பாள்.

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் நவராத்திரி விழா

Published On 2023-10-18 09:42 GMT   |   Update On 2023-10-18 09:42 GMT
  • விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
  • 24-ந் தேதி சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் அமைந்து ள்ள புகழ்பெற்ற அம்பாள் திருத்தலமாக விளங்கி வரும் கர்ப்பரட்சா ம்பிகை அம்பாள் உடனுறை முல்லை வனநாதர் திருக்கோயிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் 15-ந்தேதி தொடங்கி வரும் 24ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் 20ந்தேதி ஏகதின இலட்சார்ச்ச னையும், 23ந்தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்ப ரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னையும், 24ந்தேதி விஜயதசமி அன்று மாலை சுவாமி சந்திர சேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சிச்சியும். இரவு ஷீரகுண்டம் எனும் திருக்குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ப. ராணி மேற்பா ர்வையில் கோயில் செயல் அலுவலர் சு. அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News