உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

கடமலைக்குண்டு அரசு பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

Published On 2023-11-01 05:54 GMT   |   Update On 2023-11-01 05:54 GMT
  • கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கடந்த 3 நாட்களாக நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
  • வேம்பு, தேக்கு, தோதைகத்தி, அரச மரம் உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதை பந்துகளை மாணவர்கள் தயாரித்தனர்.

வருசநாடு:

கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கடந்த 3 நாட்களாக நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கடமலைக்குண்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் முட்செடிகளை அகற்றுதல், வைகை ஆற்றில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்துதல், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

முகாமின் இறுதி நாளான நேற்று வேம்பு, தேக்கு, தோதைகத்தி, அரச மரம் உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதை பந்துகளை மாணவர்கள் தயாரித்தனர். கடமலைக்குண்டு கிராமத்தில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மகேந்திரன், தமிழ் ஆசிரியர் செல்வம் தலைமையில் போதை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News