உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு டி.எஸ்.பி. விவேகானந்தன் சான்றிதழ் வழங்கினார்.

முத்துப்பேட்டை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

Published On 2023-01-08 10:20 GMT   |   Update On 2023-01-08 10:20 GMT
  • சாலை சீரமைப்பு பணிகள் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
  • உதவி தலைமையாசிரியர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. இதில் தினமும் தூய்மை படுத்தும் பணிகள், சாலை சீரமைப்பு பணிகள் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில் முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதற்கு உதவி தலைமையாசிரியர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிரவீன் குமார், ஆசிரியர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். திட்ட அலுவலர் ராஜாராமன் செயல் அறிக்கை வாசித்தார். இதில் டி.எஸ்.பி. விவேகானந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சி யில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்த லைவர் சௌந்தர ராஜன், ஆலங்காடு பள்ளி தலைவர் கோபி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகாம் உதவி அலுவலர் மகேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News