உள்ளூர் செய்திகள்

தேசிய ஒற்றுமை நாள், லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Published On 2022-10-31 10:17 GMT   |   Update On 2022-10-31 10:17 GMT
  • உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.
  • சுமார் 250 மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ஈரோடு:

இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மற்றும் பாதுகாப்பையும் பேணவும், மேலும் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும், சாத்தியமாக்கப்பட்ட ஒன்றினைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேணவும் மற்றும் நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய பங்களிப்பை வழங்கும் பொருட்டும், தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் நடைபெற்றது.

உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு ஓட்டத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியானது, கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, முக்கிய சாலைகள் வழியே சென்று அரசு தலைமை மருத்துவ–மனை வளாகத்தை வந்தடைந்தது.

இதில் சுமார் 250 மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் எஸ்.கணேஷ் (பொது), தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) குமரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News