உள்ளூர் செய்திகள்

தொன் போஸ்கோ கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

Published On 2023-10-25 15:19 IST   |   Update On 2023-10-25 15:19:00 IST
  • தரும புரி தொன்போஸகோ கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம் நடந்தது.
  • இளையத் தலைமுறை மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பரிணாம கோட்பாடுகள் குறித்த விழிப்பு ணர்வு

தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரியில், வேதியியல் துறை சார்பாக அறிவியல் பரிணாமக் கோட்பாடுகள் குறித்த தேசியக் கருத்தரங்கு 2 நாட்கள் நடைபெற்றது. இந்நி கழ்விற்குக் கல்லூரிச் செயலரும், சமூகப் பணித்துறைத் தலைவருமான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார். முதல்வர் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக அரூர், இ. ஆர். கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறைப் பேராசிரியர் முனைவர் சிவக்குமார் அவர்களும், மும்பை, ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சபரீசன் அவர்களும் கலந்து கொண்டு வேதியியல் பொருட்களின் பன்முகப் பயன்பாடு, அவசரக் கால மருந்து களில் வேதிப்பொ ருட்களின் பங்கு ஆகியவை குறித்து, விளக்க உரையாற்றினர்.

இந்நிகழ்வில் கல்லூரித் துணை முதல்வர் முனைவர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் அந்தோணி பாப்புராஜ், அச்சுக்கலைத் துறைப் பேராசிரியர் சார்லஸ் கஸ்பர் மற்றும் பேராசிரியர்கள் ,மாணவ, மாணவியர் எனப் பலரும் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இன்றைய இளையத் தலைமுறை மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பரிணாம கோட்பாடுகள் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்த இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறைத்த லைவர் மணிமே கலை தலைமையில் துறைப்பேரா சிரியர்கள் செய்திருந்தனர்.

Similar News