உள்ளூர் செய்திகள்

கல்பாக்கத்தில் தேசிய அளவிலான ஆண்-பெண் பேட்மிண்டன் போட்டி- மும்பை அணிகள் முதலிடம்

Published On 2023-02-18 10:21 GMT   |   Update On 2023-02-18 10:21 GMT
  • 8 மாநிலங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.
  • வின்னர் கோப்பையை முதலாவதாக மும்பை-அஜந்தா அணியினர் பெற்றனர்.

மாமல்லபுரம்:

தேசிய அளவிலான அணுசக்திதுறை ஊழியர்களின் ஆண்-பெண் "அட்டாமிக் பேட்மிண்டன்" போட்டி கல்பாக்கம் நகரியத்தின் நெஸ்கோ உள்விளையாட்டு அரங்கத்தில் 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 8 மாநிலங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.

வின்னர் கோப்பையை முதலாவதாக மும்பை-அஜந்தா அணியினர் பெற்றனர். இரண்டாம் இடத்தை கல்பாக்கம் இராமேஸ்வரம் அணியினர் பெற்றனர். பெண்கள் பிரிவில் மும்பை அணியினர் வெற்றி பெற்றனர். கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் எஸ்.பி.ஷெல்கே வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.

Tags:    

Similar News