உள்ளூர் செய்திகள்

அனைத்து தொழில் நிறுவனங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்

Published On 2022-08-12 09:02 GMT   |   Update On 2022-08-12 09:02 GMT
  • 75ஆவது சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத்துறை சார்பில் அனைத்து தொழில் நிறுவனங்களும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
  • தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத்துறை உதவி இயக்குநா் எல்.திருநந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகர மோட்டாா் சக்கர (டயா்) சங்கம், இரு சக்கர வாகனம் பழுது பாா்ப்போா் சங்கம், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், லாரி பாடி பில்டிங் சங்கம் பிரதிநிதி, லாரி கூண்டு கட்டும் சங்கம் மற்றும் பழுது பாா்ப்போா் சங்கம், பெட்ரோல் பங்க் உரிமையாளா்கள் சங்கம், நகைக் கடை உரிமையாளா்கள் சங்கம் ஆகியவற்றின் நிா்வாகிகளுக்கு 75ஆவது சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடுவது தொடா்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. நாளை(13ந்தேதி) முதல் 15ந்தேதி வரை சுதந்திரத் திருநாளை கொண்டாடும் வகையில் அனைத்து நிறுவனங்கள் முன்பாகவும் தேசியக் கொடியினை ஏற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News