உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த பள்ளி மாணவிகளை படத்தில் காணலாம்.

திறனாய்வு தேர்வில் நத்தமேடு அரசு பள்ளி மாணவிகள் சாதனை

Published On 2023-12-06 10:09 GMT   |   Update On 2023-12-06 10:09 GMT
  • திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.
  • 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படும்.

கடத்தூர்,

தருமபுரி மாவட்ட கல்வி துறை சார்பில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கான திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.

இதில் நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். இதில் அப்பள்ளியை சேர்ந்த சிவசங்கரி, பிரிய தர்ஷினி, நதியா, பிரியங்கா ஆகிய 4 மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாணவிக்கும் மாதம் ரூ.1500 வீதம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படும்.

வெற்றி பெற்ற மாணவி களை பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராசு, தேர்வு பொறுப்பாசிரியர் செந்தில் அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News