உள்ளூர் செய்திகள்

ட்ரோன் மூலம் நானோ யூரியா மருந்து தெளிப்பதை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

குறுவை பயிரில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு- கலெக்டர் ஆய்வு

Published On 2022-07-29 09:25 GMT   |   Update On 2022-07-29 09:25 GMT
  • 1 ஏக்கருக்கு சுமார் 45 கிலோ பயன்படும் இடத்தில் 500 எம்.எல் நானோ யூரியாவை எளிதில் ஏக்கர் முழுவதும் தெளித்துவிடலாம்.
  • நானோ யூரியா பயன்படுத்தும் முறை குறித்து அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் மேற்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூரில் குறுவை நெல் பயிறில் டிரோன் மூலம் நானோ யூரியா மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் செயல் விளக்கம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது அவர் கூறியதாவது:-மேலப்பூதனூர் கிராமத்தில் ஒரு முன்னோடி விவசாயி அவரின் நிலத்தில் குறுவை சாகுபடி செய்து அவற்றிற்கு ட்ரோன் மூலமாக நானோ யூரியா என்ற உரத்தை தெளித்துள்ளார்.

நானோ யூரியா பயன்படுத்துவதன் மூலம் 1 ஏக்கருக்கு சுமார் 45 கிலோ பயன்படும் இடத்தில் 500 எம்.எல் நானோ யூரியாவை எளிதில் ஏக்கர் முழுவதும் தெளித்துவிடலாம்.ட்ரோன் மூலம் நானோ யூரியா மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்து தெளிப்பதால் ஒரு குறைவான நேரத்தில் அதிக பரப்பினை தெளிக்க முடியும். தற்சமயம் ஆள் பற்றாக்குறையை போக்க ட்ரோன் முறை பயன்படுத்தலாம். நானோ யூரியா பயன்படுத்தும் முறை குறித்து அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் மேற்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்முறை விளக்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் ஜாக்குலா அகண்டராவ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News