உள்ளூர் செய்திகள்

டிராக்டர் மீது லாரி மோதி வடமாநில டிரைவர் பலி

Published On 2023-07-07 16:09 IST   |   Update On 2023-07-07 16:09:00 IST
  • சேலத்தில் இருந்து மதுரைக்கு செல்ல, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர்
  • அதிவேகமாக வந்த லாரி ஒன்று, சேட்டு ஓட்டி சென்ற டிராக்டர் மீது மோதியது.

பரமத்திவேலூர்

உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா, சார்க்கான் பகுதியை சேர்ந்தவர் பிரகலாத்சிங். இவரது மகன் சேட்டு (வயது 21). இவர் நேற்று புதிய டிராக்டர் ஒன்றை டெலிவரி செய்வதற்காக சேலத்தில் இருந்து மதுரைக்கு செல்ல, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியில் வந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, சேட்டு ஓட்டி சென்ற டிராக்டர் மீது மோதியது. இதில் சேட்டு தூக்கி வீசப்பட்டதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார், சேட்டுவின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர்.

மேலும் டிராக்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News