உள்ளூர் செய்திகள்

நாமக்கல் பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள் அகற்றம்

Published On 2023-07-07 16:06 IST   |   Update On 2023-07-07 16:06:00 IST
  • 10-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் மற்றும் பல வணிக ரீதியான கடைகள், கோவில் அருகே வழித்தடங்களை ஆக்கிரமிப்பு
  • திருக்கோவில்களின் அருகில் உள்ள வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த, கடைகளின் முகப்புகளை அகற்றியுள்ளோம்.

நாமக்கல்

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்ச நேயர் மற்றும் நரசிம்மர் திருக்கோவில்களின் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அமைக்கப் பட்டுள்ளதாகவும், இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளதாகவும், நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கலெக்டர் உமா உத்தரவின்பேரில், நாமக்கல் சப்-கலெக்டர் சரவணன் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் மற்றும் பல வணிக ரீதியான கடைகள், கோவில் அருகே வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்து அமைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆக்கிரமிப்புகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். இதேபோல் நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், கடை வீதி பகுதிகளிலும் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ நரசிம்மர் திருக்கோவில்களின் அருகில் உள்ள வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த, கடைகளின் முகப்புகளை அகற்றியுள்ளோம்.

இதே போல் பஸ் ஸ்டாண்ட், கடைவீதிகளிலும் ஆக்கிரப்புகளை அகற்றி வருகிறோம்.

கடை உரிமையாளர்கள் தாங்களாகவே முன் வந்து அவரவர் கடைகளுக்கு, அருகில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட, கடைகளை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News