உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு

Published On 2023-07-17 06:40 GMT   |   Update On 2023-07-17 06:40 GMT
  • முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல்லில் தினசரி நிர்ணயம் செய்கிறது.
  • முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல்லில் தினசரி நிர்ணயம் செய்கிறது.

அதன்படி நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டையின் விலை 460 காசிலிருந்து 465 காசாக உயர்ந்தது.

நாமக்கல் மண்டலத்திற்குட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 101 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 103 ரூபாயாக உயர்ந்தது. முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 77 ரூபாயாக நீடிக்கிறது.

Tags:    

Similar News