உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு பயிற்சி

Published On 2023-08-31 07:51 GMT   |   Update On 2023-08-31 07:51 GMT
  • விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம்’’ குறித்து ஆவல்நாய்க்கன்பட்டி கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது.
  • உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் 'கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம்'' குறித்து ஆவல்நாய்க்கன்பட்டி கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது. அதுசமயம் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது. மேலும் முக்கிய திட்டங்களில் உள்ள இடை வெளியினை குறைக்கும் வகையில் விவசாயிகளின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் அவர்க ளின் வருமானத்தை உயர்த்திடவும் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய "மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம்" கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றது என்று விளக்கமளித்து பயிற்சி வழங்கினார். இதில் உடன் உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி துறைசார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினார். அட்மா திட்ட உழவனின் நண்பன் நந்தகுமார் அட்மா திட்ட செயல்பாடுகள் மற்றும் இக்குழுவின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர். ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர். கவிசங்கர் ஆகியோர் வருகைபுரிந்த விவசாயி களுக்கு உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News