உள்ளூர் செய்திகள்

சமையல் செய்தபோது பரிதாபம் - ஸ்டவ் வெடித்து பெண் பலி

Published On 2023-11-22 13:23 IST   |   Update On 2023-11-22 13:34:00 IST

குமாரபாளையம்:

சேலம் மாவட்டம் கருப்பூர் வெள்ளாளபட்டியைச் சேர்ந்தவர் குமார். இவர் தனது மனைவி செல்வியுடன் (36) நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஆலாங்காட்டுவலசுவில் தங்கி அங்குள்ள விசைத்தறி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று செல்வி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பம்பு ஸ்டவ் வெடித்தது. இதில் அருகில் இருந்த செல்வி மீது தீப்பற்றியது. உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் செல்வி கதறி துடித்தார். பலத்த தீக்காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் செல்வி இறந்து போனார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News