உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

Published On 2023-09-19 08:06 GMT   |   Update On 2023-09-19 08:06 GMT
  • பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் தீபன் சக்ரவர்த்தி என்கிற நந்தகுமார் (22). கூலித்தொழிலாளி.
  • காலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த நந்தகுமார் வீட்டில் இருந்த சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

பரமத்திவேலூர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் தீபன் சக்ரவர்த்தி என்கிற நந்தகுமார் (22). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (21). இவர்களுக்கு இளமதி என்ற 1½ வயது பெண் குழந்தை உள்ளது. நந்தகுமாரின் மனைவி சங்கீதா கடந்த 15-ந் தேதி பெருமாபாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு திருவிழாவிற்கு சென்று விட்டார். நந்தகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த நந்தகுமார் வீட்டில் இருந்த சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட நந்தகுமார் உயிருக்கு போராடியுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று நந்தகுமாரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கெனவே நந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News