உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் அருகேகாவிரி ஆற்றில் மணல் கடத்திய டெம்போ பறிமுதல்

Published On 2023-11-05 08:38 GMT   |   Update On 2023-11-05 08:38 GMT
  • காவிரி ஆற்றில் அனுமதியின்றி டெம்போ வாகனத்தில் மணல் எடுப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் காவிரி ஆற்றில் டெம்போவில் மணல் அள்ளிக்கொண்டு இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் அனுமதியின்றி டெம்போ வாகனத்தில் மணல் எடுப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் காவிரி ஆற்றில் டெம்போவில் மணல் அள்ளிக்கொண்டு இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதனையடுத்து போலீசார் டெ ம்போ வாகனத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ய அனிச்சம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News