உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் அருகே நடந்த இரட்டை கொலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

Published On 2023-11-05 08:43 GMT   |   Update On 2023-11-05 08:43 GMT
  • இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
  • தீவிர விசாரணை நடத்தியும் இதுவரை எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் குச்சிக்காட்டை சேர்ந்த வர்கள் சண்முகம் (70)-நல்லம்மாள் (65) தம்பதி. கடந்த அக்டோபர் மாதம் 12-ந் தேதி அதிகாலையில் இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி சண்முகத்தையும், குரல்வளையை அறுத்து நல்லம்மாளையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 7 பவுன் தங்க நகையும் திருடி சென்றனர்.

இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தியும் இதுவரை எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இதனால் கொலையான தம்பதியின் உறவினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து அவர்களது உறவினர்கள் கூறுகையில், இறந்த சண்முகத்தின் குடும்பத்தாருக்கு எதிரிகளே இல்லாத சூழ்நிலையில் வீடு மாறி கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் கொலை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News