உள்ளூர் செய்திகள்

உத்திரகிடி காவல் ஊராட்சி நாச்சிபுதூர் காலனியில் இணையவழி பட்டா வழங்குவதற்கான வரன்முறை படுத்தும் பணிகளை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

இணையவழி பட்டா வழங்குவதற்கானபணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

Published On 2023-11-29 12:34 IST   |   Update On 2023-11-29 12:34:00 IST
  • ராசிபுரம் பொன்குறிச்சி ஊராட்சி பொன்நகரில் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பகுதியில் தற்போது வரை இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தப்பட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 நாமக்கல்:

ராசிபுரம் பொன்குறிச்சி ஊராட்சி பொன்நகரில் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பகுதியில் தற்போது வரை இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தப்பட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ராசிபுரம் வட்டம், காட்டூர் அணைக்கும் கரங்கள் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு இப்பள்ளிக்கு அரசால் வழங்கப்படும் நிதி ஆதாரங்கள், செலவினங்கள் பயன்பெறும் குழந்தைகள், குழந்தைகள் கற்றல் திறன் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து சேந்தமங்கலம் வட்டம் உத்திரகிடி காவல் ஊராட்சி, நாச்சிபுதூர் காலணியில் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரவியல் கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) மகிழ்நன், தாசில்தார் (தேர்தல்கள்) திருமுருகன், ராசிபுரம் தாசில்தார் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News