உள்ளூர் செய்திகள்

எலச்சிபாளையத்தில் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கு இடுபொருட்களை தி.மு.க ஒன்றிய செயலாளர் தங்கவேல் வழங்கிய காட்சி.

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா

Published On 2023-07-13 15:16 IST   |   Update On 2023-07-13 15:16:00 IST
தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி

திருச்செங்கோடு:

எலச்சிபாளையம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலமாக 600 விவசாயிகளுக்கு இடுபொருட்கள், தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி பெரியமணலியில் நடைபெற்றது. விழாவில் எலச்சிபாளையம் கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளரும், அட்மா குழு தலைவருமான தங்கவேல் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். வேளாண்மை துறை துணை இயக்குனர் ஜெயமணி, வேளாண் அதிகாரிகள் ராஜதுரை, சக்திவேல், பெரியமணலி ஊராட்சி மன்ற தலைவர் சேகர், கட்சி நிர்வாகிகள் பெரியசாமி, மோகன், குழந்தைவேலு, விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News