உள்ளூர் செய்திகள்

பள்ளி கட்டிட கட்டுமான பணியை கலெக்டர் உமா ஆய்வு

Published On 2023-07-13 15:17 IST   |   Update On 2023-07-13 15:17:00 IST
மாணவர்களுக்கு தேவையான அடிப் படை வசதிகள் உள்ளனவா என்பதனை ஆய்வு

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரைக்குறிச்சி கிராமத்தில் கட்டப்பட்டு ள்ள, பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தினை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, குடிநீர், கழிவறை, சாய்தளம், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார்.தொடர்ந்து மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு, மாணவர களுக்கு தேவையான அடிப் படை வசதிகள் உள்ளனவா என்பதனை ஆய்வு மேற் கொண்டார்.மேலும் குமரிபாளையம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தி னையும் கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின் போது மோகனூர் தாசில்தார் சுப்பிரமணியன், பிடிஓக்கள் அசோகன், சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News