உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை வட்டார விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களை காப்பீடு செய்ய அழைப்பு

Published On 2023-11-28 13:06 IST   |   Update On 2023-11-28 13:06:00 IST
  • பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2023-2024-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் ரபி பருவத்திற்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்
  • அனைத்து பயிர்களையும் மிகக்குறைந்த பிரிமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம்.

 பரமத்திவேலூர்:

கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2023-2024-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் ரபி பருவத்திற்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். நெல்-(சம்பா), சோளம், நிலக்கடலை, கரும்பு, சிறிய வெங்காயம், வாழை, மரவள்ளி, தக்காளி உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் மிகக்குறைந்த பிரிமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம். விவசாயிகள் முன்மொழிவு படிவம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல் அறிக்கை, ஆதார் அட்டை நகல் மற்றும் குறைந்தபட்ச இருப்பு வைத்துள்ள வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 5 சதவிகிதம் பிரிமியமும், இதர குறுகிய காலப்பயிர்களுக்கு 1.5 சதவிகித பிரிமியமும் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அருகிலுள்ள கபிலர்மலை வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறை விரிவாக்க அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்கள், அந்த கிராமத்தில் எந்தெந்த பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது, காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி, விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிருக்கு எவ்வளவு பிரிமியம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்களை விவசாயிகள் தமிழக அரசின் விவசாயிகளுக்கான சிறப்பு செயலியான உழவன் செயலியில் தங்களது கைப்பேசியிலியே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News