நாகப்பட்டினம் பாரம்பரிய நகர்மன்ற கட்டிடம் புனரமைக்கப்படும்
- நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- பாரம்பரிய நகர்மன்ற கட்டிடம் விரைவில் புனரமைக்கப்படும் என உறுதி கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகர்மன்ற அலுவலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில், நகராட்சியை தரம் உயர்த்துதல், பாரம்பரிய நகர்மன்ற கட்டிடத்தை புனரமைத்தல், பாரதி மார்க்கெட் மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல் ஆகிய திட்டப் பணிகள் குறித்து விவாதிக்க ப்பட்டது.
அப்போது, நகராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாக்கடை பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ வலியுறுத்தினார். மேலும் பாரம்பரிய நகர்மன்ற கட்டிடம் விரைவில் புனரமைக்கப்படும் என உறுதி கூறினார்.
கலந்தா ய்வுக் கூட்ட த்தில், நகர்மன்றத் தலைவர் இரா.மாரி முத்து, நகர்ம ன்றத் துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்கு மார், நகராட்சி ஆணையர் ப.திருமால் செல்வம், நகராட்சி செயற்பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.