உள்ளூர் செய்திகள்

சுழற்கோப்பை வென்ற நாகை அணியினர்.

கபடி போட்டியில் சுழற்கோப்பை வென்று நாகை அணியினர் முதலிடம்

Published On 2022-06-21 08:14 GMT   |   Update On 2022-06-21 08:14 GMT
  • கபடி போட்டியில் தஞ்சை,நாகை,திருவாரூர் மயிலாடுதுறை,காரைக்காலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர்.
  • வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுதொகையும்,சுழற்கோப்பையும் வழங்கபட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடமழை மா.சு.மணிநினைவு கபாடி கழகம் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. போட்டியினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தொடக்கி வைத்தார். தி.மு.க. கிளை செயலாளர் செந்தில் வரவேற்றார்.

நிகழ்ச்சியில்தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம்உள்ளிட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கபடி போட்டியில் தஞ்சை,நாகை,திருவாரூர் மயிலாடுதுறை,காரைக்காலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர்.

போட்டிகளில் முதல் பரிசு ரூ. 30,099 நாகப்பட்டினம் அணியினரும், இரண்டாவது பரிசு ரூ. 25,099 ஆறுகாட்டுத்துறை அணியினரும், மூன்றாவது பரிசு ரூ. 20,099 வடமழை மா.சு.மணி நினைவு கபாடி கழகத்தினரும், நான்காம் பரிசு ரூ. 15,099 அக்கரைப்பேட்டை அணியிணரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத் தொகையோடு சுழற்கோப்பையும் வழங்கபட்டது. விழாவின் முடிவில் கவி இளவரசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News