உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

நாச்சிக்குளம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்

Published On 2023-03-23 09:34 GMT   |   Update On 2023-03-23 09:34 GMT
  • நாச்சிகுளம் அரசு பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
  • பள்ளிக்குத் தேவையானதை முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் செய்து தரப்படும்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் டாக்டர் கந்தசாமி தலைமையிலும், தலைமை ஆசிரியர்தமிழ்செல்வன், பிடிஏ தலைவர் தாஹிர், மேலாண்மை குழு தலைவர்செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

முன்னாள் மாணவர் சங்க செயலாளர்தாஜுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தலைவர் டாக்டர் கந்தசாமி, துணைத்தலைவர்கள் தனுஷ். பாண்டியன், ஜாகிர் உசேன், செயலாளர்தாஜுதீன், துணை செயலாளர்க ள்குருநாதன், சத்யா, பொருளாளர்ஜான் முகமது, ஆலோசகர்களாக ஜெயசீலன், சோமசுந்தரம், தங்கராஜன், சேக்அலாவுதீன், சாகுல் ஹமீது, இர்பான்அலி, செயற்குழு உறுப்பினர்களாக தமிழ்ச்செல்வன், கணேசன், சுந்தரபாண்டியன், முருகானந்தம், செந்தில்குமாரி, அமீன், அபிராமி,காவியா ,அப்துல் ரகுமான், பாசிலன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில், அலாவுதீன் ,ஆனந்த், ராஜலட்சுமி உட்பட முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளிக்குத் மிக அவசியமான தேவைகளை முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் செய்து கொடுப்பது என்றும் வரும் ஆகஸ்ட் மாதம் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து முன்னாள் மாணவர்கள் குடும்ப விழா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News