உள்ளூர் செய்திகள்

குழந்தையுடன் மாயமான இளம்பெண்

Published On 2023-02-02 10:05 GMT   |   Update On 2023-02-02 10:05 GMT
  • 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
  • ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.ஜி.ஆர். நகர் சிவன்கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 24 ). இவர் தனது 4 வயது குழந்தை ஸ்ரீனிதுயுடன் கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

இது குறித்து அவரது கணவர் கம்சலா கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல கேளுகுண்டா கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் தாமோதரன் (15). இவரது உறவினர் ஒருவர் வெங்கடேஷ் நகரில் வசித்து வருகிறார். அவரது மகன்களான வினோத்குமார் (15), நடராஜ் (16) ஆகியோர் கடந்த ஒரு வாரமாக பெரியசாமி வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் துக்க காரியம் ஒன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெரியசாமி 3 சிறுவர்களையும் காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பெரியசாமி தந்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல கோவிந்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ள சிறுமியின் தாய் பிரதீபா தனது மகளை தாகேபல்லிதின்னா பகுதியை சேர்ந்த சிவகுமார் (19) என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News