உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்

Published On 2023-02-04 09:56 GMT   |   Update On 2023-02-04 09:56 GMT
  • வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
  • இன்பசேகரன் என்ற இளைஞர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகள் ஸ்ரீநிதி (வயது 21). கடந்த மாதம் 19-ந்தேதி அன்று வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்துள்ள ஸ்ரீநிதியின் தாய் வெங்கட்டம்மாள் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த இன்பசேகரன் என்ற இளைஞர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News