உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே 2 குழந்தைகளுடன் மாயமான தாய் மீட்பு
- பல இடங்களில் தேடிஎங்கும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
- புதுப்பேட்டைபோலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்குசெட்டிபாளையம் கிராமத்தைசேர்ந்தவர் ராஜா. இவரதுமனைவிகாயத்ரி, இவர்களுக்கு 2மகள்கள் கோபிகா,தேஜா உள்ளனர். காயத்ரி தனது 2 மகளுடன் கடந்த29 -ந் தேதி திடீரென்றுகாணாமல் போனார் . பல இடங்களில் தேடிஎங்கும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
இதுபற்றி புதுப்பேட்டைபோலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வந்தார். பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். போலீசாரின்தீவிர முயற்சியினால் 2மகளுடன் காயத்ரியை மீட்டனர். அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் இதனால் அவரது குடும்பத்தினர் மகழ்ச்சி தெரிவித்தனர்.