உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திய மர்ம நபர்

Published On 2023-09-18 11:23 IST   |   Update On 2023-09-18 11:23:00 IST
  • பெண் திண்டுக்கல் பஸ் நிலையம் மதுரை மார்க்கத்தில் பஸ் செல்லும் பகுதியில் நின்றுகொண்டிருந்தார்.
  • அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை சரமாரியாக குத்தினார்.

திண்டுக்கல்:

ஒட்டன்சத்திரம் அருகே வடகாட்டுப்பட்டி மாட்டுப்பட்டி காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் மனைவி சுமித்ரா (வயது37). இவர் இன்று திண்டுக்கல் பஸ் நிலையம் வந்தார். மதுரை மார்க்கத்தில் பஸ் செல்லும் பகுதியில் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் சுமித்ராவை சரமாரியாக குத்தினார். இதில் கை, முதுகு உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்தார். சுமித்ரா அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். இதை பார்த்ததும் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்த சுமித்ராவை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நகர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பஸ் நிலையத்தில் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News