உள்ளூர் செய்திகள்

மர்மவிலங்கு கடித்ததில் இறந்து கிடக்கும் ஆடுகள்.


ஆவுடையானூரில் இரவில் ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு

Published On 2022-08-24 08:52 GMT   |   Update On 2022-08-24 08:52 GMT
  • பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் ஊரணி அருகே ஆசாரி தெருவில் வசித்து வருபவர் மஞ்சிஈஸ்வரன். இவர் தனது கோவிலின் நேர்த்திக் கடனுக்காக 2 ஆடுகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.
  • முதலில் ஆடுகளை நாய்கள் தான் கடித்ததாக கூறப்பட்ட நிலையில் பொதுமக்கள் பலரும் அதனை கண்டு நாய்கள் கடிக்கவில்லை. வேறு ஏதேனும் மர்ம விலங்கு கடித்து உள்ளது என கூறிவருகின்றனர்.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் ஊரணி அருகே ஆசாரி தெருவில் வசித்து வருபவர் மஞ்சிஈஸ்வரன். இவர் தனது கோவிலின் நேர்த்திக் கடனுக்காக 2 ஆடுகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவில் தனது வீட்டின் முகப்பு பகுதியில் வழக்கம் போல் 2 ஆடுகளையும் கட்டி போட்டுவிட்டு வீட்டின் உள்ளே தூங்கியுள்ளார். இன்று காலையில் எழுந்து ஆடுகளை பார்த்த பொழுது 2 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்து குதறி போட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

முதலில் ஆடுகளை நாய்கள் தான் கடித்ததாக கூறப்பட்ட நிலையில் பொதுமக்கள் பலரும் அதனை கண்டு நாய்கள் கடிக்கவில்லை. வேறு ஏதேனும் மர்ம விலங்கு கடித்து உள்ளது என கூறிவருகின்றனர்.

இதனால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்குகள் என்னவென்று வனத்துறை அதிகாரிகள் இன்று காலையில் வந்து ஆய்வு செய்து உள்ளனர்.

ஏற்கனவே அப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் சிறுத்தை போன்ற மர்ம விலங்கு ஒன்று சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்களும் தற்பொழுது அந்த விலங்காக தான் இருக்குமோ என்று அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Tags:    

Similar News