உள்ளூர் செய்திகள்

தே.மு.தி.க. சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்ற காட்சி.

தூத்துக்குடியில் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி மும்மத வழிபாடு

Published On 2022-06-27 09:54 GMT   |   Update On 2022-06-27 09:54 GMT
  • தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் நலம்பெற வேண்டுதல்.
  • தூத்துக்குடி பாலவிநாயகர் கோவிலில், பெரிய ஜாமிய பள்ளிவாசல், பெரிய பனிமயமாதா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பூரண நலம்பெற்று பழைய கம்பீரத்துடன் வர தூத்துக்குடியில் உள்ள பழைய பஸ் நிலையம் அருகே பாலவிநாயகர் கோவிலில் சிறப்பு பால அபிஷேகம் பூஜையும், பெரிய ஜாமிய பள்ளிவாசலில்சிறப்பு தூஆவும், பிரசித்திபெற்ற தூத்துக்குடி பெரிய பனிமயமாதா

கோவிலில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பொறு ப்பாளர் தயாளலிங்கம், பொருளாளர் விஜயன், துணை செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் , மகளிரணி மாலதி, பகுதி நிர்வாகிகள்

வட்ட செயலாளர்கள் வல்லரசுதுரை, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News