உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- வாலிபர் சாவு

Published On 2022-08-22 10:10 GMT   |   Update On 2022-08-22 10:10 GMT
  • அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 38). இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் இந்திரா நகர் பகுதியில் இருந்து கோட்டக்குப்பத்திற்கு சென்றார். அப்போது மோட்டார்சைக்கிள் கோட்டகுப்பம் சறுக்கு பாலம் அருகே சாலையை கடக்கும்போது புதுவை மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்  மோதியது. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டக்குப்பம் போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு புதுவை பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சசை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News