உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
- காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.
- சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் சதாம்உசேன்(35). இவர் சம்பவத்தன்று இரவு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை அவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து சதாம் உசேன் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் இருசக்கர வாகனத்தை திருப்பூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜ்கமல்(34) திருடிச்சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் ராஜ்கமலை கைது செய்து, மேலும் அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தில் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து ராஜ்கமலிடன் விசாரணை செய்து வருகிறார்.